என் கடன் பணி செய்து கிடப்பதே!

ஞாயிறு, 5 ஜூன், 2011

SAVARIMUTHU ARULDOSS MEMORIAL TRUST

என்னை பற்றி வெளி வந்த செய்திகள் ஆதாரம் duraipudukkottai .blogspot.com

அறக்கட்டளை சார்பாக உறுப்பினர்களுக்கு  சமுதாய பணியாற்றிட இலவச மோட்டார் பைக் டாக்டர் ரவிச்சந்திரன் வழங்குகிறார்








அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு அறக்கட்டளை  சார்பாக அதன் நிர்வாக இயக்குனர் இலவசமாக மோட்டார் பைக் வழங்கிய நிகழ்ச்சியின்
ஒரு பகுதி .

திங்கள், 16 மே, 2011

சவரிமுத்து அருள் தாஸ் நினைவு அறக்கட்டளை









புதுக்கோட்டை மாவட்டம்   பழைய பேருந்து நிலையம் அருகில்  அமைந்திருக்கும்
ஸ்ரீ வல்லப விநாயகர் ஆலயத்திற்கு   நான்கு கிலோ எடை உள்ள வெள்ளி கவசம் ,காணிக்கையாக டாக்டர் அ.ரவிச்சந்திரன் அவர்கள் வழங்கிய நிகழ்ச்சியின் ஒரு பகுதி .பழைய பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச சீருடை, சவரிமுத்து அருள் தாஸ்
 நினைவுஅறக்கட்டளை  சார்பாக வழங்கப்பட்டது .மேலும் பொதுமக்களுக்கு
அன்னதானம்
வழங்கப்பட்டது .   

SAVARIMUTHU ARULDOSS MEMORIAL TRUST








புதுக்கோட்டை மாவட்டத்தின்  பழைய பேருந்து நிலையம் அருகில்  அமைந்திருக்கும்
ஸ்ரீ வல்லப விநாயகர் ஆலயத்திற்கு   நான்கு கிலோ எடை உள்ள வெள்ளி கவசம் ,காணிக்கையாக டாக்டர் அ.ரவிச்சந்திரன் அவர்கள் வழங்கிய நிகழ்ச்சியின் ஒரு பகுதி .பழைய பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச சீருடை, சவரிமுத்து அருள் தாஸ் நினைவு
அறகட்டளை சார்பாக வழங்கப்பட்டது .மேலும் பொதுமக்களுக்கு அன்னதானம்
வழங்கப்பட்டது .   

திங்கள், 2 மே, 2011

பாரத தாயின் கண்ணீரை துடைக்க

 என்னை பற்றி வெளிவந்த செய்திகள் ஆதாரம் duraipudukkottai.blogspot.com


 சாதாரணமாக நம்மில் பலர் அடுத்தவருக்கு சிறிய உதவி செய்தால் கூட
பெரிய அளவில் விளம்பரம் செய்வதை பார்த்திருப்போம்.உதாரணமாக ஒரு கோவிலுக்கு ஒரு மின் விளக்கை ஒருவர் நன்கொடையாக கொடுக்கிறார் என்றால்
அந்த மின் விளக்கே மறையும் அளவிற்கு நன்கொடை கொடுத்தவரின் பெயர் அதில் எழுதப்பட்டிருக்கும். ஆனால் இந்த கலிகாலத்தில் ஏழை எளிய மக்களுக்கு பெரிய அளவில் உதவி செய்து,வெளி உலகிற்கு தான்
கொடை கொடுத்தது வெளியில் தெரியாத  வண்ணம் ,ஏழை எளிய மக்களுக்கு
உதவி செய்து கொண்டிருக்கும் கலியுக கர்ணன் டாக்டர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு
நிகர் வேறு யாரும் கிடையாது .மேற்கண்ட படத்தில் மூன்று பெண் குழந்தைகள்
உள்ளன ,அய்யா டாக்டர்  ரவிச்சந்திரன் அவர்கள் கடந்த ஆண்டு இந்த  குழந்தைகளின் கல்விக்கு தேவையான நிதி உதவி தந்து உதவியவர் என்ற செய்தி யாராலும் மறுக்க முடியாது .நான் இவ்வாறு கூறுவது அவரை பெருமை படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல,அவருடைய மகுடங்களில் ஜொலிகின்ற சிலவற்றை மட்டுமே இங்கே குறிப்பிட்டேன் .ஏனெனில் அவரை பெருமை படுத்துவதற்காக அல்ல ,  .ஓர் ஆயிரம் ரவிச்சந்திரன்   இந்த
 தேசத்திற்கு வருக பாரத தாயின் கண்ணீரை துடைக்க .பாரத் மாதாக்கி ஜே  ! 

திங்கள், 28 மார்ச், 2011

அன்பு

சில வருடங்களுக்கு முன்பு, வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டுக்குச் சென்று இருந்தேன். அவரது வரவேற்பறையில் இரண்டு கைகளின் புகைப்படம். யாரோ ஒரு புனிதரின் கைகளாக இருக்கக்கூடும் என்று நினைத்து, அதைப்பற்றிக் கேட்கவே இல்லை. அவரோடு காரில் பயணம் செய்யும்போது, அதேபோன்ற கைகளின் புகைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். ஆவலில் அது யாருடைய கைகள் என்று கேட்டேன்.

அவர் புகைப்படத்தைக் கையில் எடுத்துப் பார்க்கும்படியாகச் சொன்னார். புகைப்படத்தை அருகில் தொட்டுப் பார்த்தபோது, அது வயதான ஒரு பெண்ணின் கைகள் என்பதைக் கண்டுகொண்டேன். முதுமையின் ரேகை படிந்த நீண்ட விரல்கள். நகங்கள் சுத்தமாக வெட்டப்பட்டு இருக்கின்றன. நரம்புகள் புடைத்துத் தெரிகின்றன. யாராக இருக்கும் என்று மனது ஏதேதோ துறவிகளை, ஞானிகளை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது.
அவர் அந்தக் கைகளைப் பெருமூச்சுடன் பார்த்து ஆதங்கமான குரலில் அது என் அம்மாவின் கைகள் என்று சொன்னார். ஆச்சர்யமாக இருந்தது. "எதற்காக அம்மாவின் கைகளை மட்டும் புகைப்படமாக வைத்திருக்கிறீர்கள்?" என்று கேட்டேன்.

"
அந்தக் கைகள்தான் என்னை வளர்த்தன. என் நினைவில் எப்போதுமே அம்மாவின் கைகள்தான் இருக்கின்றன. அம்மாவின் முகத்தைவிட, அந்தக் கைகளைக் காணும்போதுதான் நான் அதிகம் நெகிழ்ந்துபோகிறேன்.
அம்மா இறப்பதற்குச் சில மணி நேரம் முன்பாக இந்தப் புகைப்படத்தை எடுத்தேன். இந்தக் கைகள் இப்போது உலகில் இல்லை. ஆனால், இதே கை களால் வளர்க்கப்பட்டவன் உங்கள் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன்.
என் அம்மா எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஓய்வு எடுத்ததே இல்லை.
அப்பா பொறுப்பற்ற முறையில், குடித்து, குடும்ப வருமானத்தை அழித்து 32 வயதில் செத்துப் போனார்.அம்மாதான் எங்களை வளர்த்தார். நாங்கள் மூன்று பிள்ளைகள். அம்மா படிக்காதவர். ஒரு டாக்டரின் வீட்டில் பணிப் பெண்ணாக வேலைக்குச் சேர்ந்தார். பகல் முழுவதும் அவர்கள் வீட்டினைச் சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, நாய்களைப் பராமரிப்பதுபோன்ற வேலைகள். மாலையில் இன்னும் இரண்டு வீடுகள். அங்கும் அதேபோல் சுத்தம் செய்யும் வேலைதான்.
எத்தனை ஆயிரம் பாத்திரங்களை அம்மாவின் கைகள் விளக்கிச் சுத்தம் செய்து இருக்கும் என்று நினைத்துப்பார்க்கவே மனது கஷ்டமாக இருக்கிறது.
இரவு வீடு திரும்பிய பிறகு, சமைத்து எங்களைச் சாப்பிடவைத்து உறங்கச்செய்துவிட்டு அதன் பின்னும் அம்மா இருட்டிலேயே கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டு இருப்பார்கள். சமையல் அறையில்தான் உறக்கம்.
அப்போதும் கைகள் அசைந்தபடியேதான் இருக்கும். எங்கள் மூவரையும் பள்ளிக் கூடம் அழைத்துப் போகையில் யார் அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடப்பது என்பதில் போட்டியே இருக்கும்.
அந்தக் கைகளைப் பிடித்துக்கொள்வதில் அப்படி ஒரு நெருக்கம், நம்பிக்கை கிடைக்கும். அதுபோலவே உடல் நலம் இல்லாத நாட்களில் அம்மாவின் கைகள் மாறி மாறி நெற்றியைத் தடவியபடியே இருக்கும். அம்மா நிதானமாகச் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை.
தனது சகலச் சிரமங்களையும் அம்மா தன் கைகளின் வழியே முறியடித்து எங்களை வளர்த்தபடியே இருந்தார். மருத்துவரின் வீட்டில் அம்மா ஒருநாள் ஊறுகாய் ஜாடியை உடைத்துவிட்டார் என்று அடி வாங்குவதைப் பார்த்தேன். அம்மாவின் கன்னத்தில் மருத்துவரின் மனைவி மாறி மாறி அறைந்துகொண்டு இருந்தார். அம்மா அழவே இல்லை.
ஆனால், நாங்கள் பார்த்துக்கொண்டு இருப்பதைத் தாங்க முடியாமல், விடுவிடுவென எங்களை இழுத்துக்கொண்டு அந்த வீட்டில் இருந்து வெளியேறினாள். வழியில் பேசவே இல்லை. அம்மாவை எந்தக் கைகளும் ஆறுதல்படுத்தவோ, அணைத்துக்கொள்ளவோ இல்லை. அவள் கடவுள் மீதுகூட அதிக நம்பிக்கைகொண்டு இருந்தாள் என்று தோன்றவில்லை. வீட்டில் சாமி கும்பிடவோ, கோயிலுக்குப் போய் வழிபடவோ, அதிக ஈடுபாடு காட்டியதே இல்லை. வேலை... வேலை... அது மட்டுமே தன் பிள்ளைகளை முன்னேற்றும் என்று அலுப்பின்றி இயங்கிக்கொண்டு இருந்தார்.
சிறு வயதில் அந்தக் கைகளின் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொள்ளவே இல்லை.
ஆசையாகச் சமைத்துத் தந்த உணவைப் பிடிக்கவில்லை என்று தூக்கி வீசி இருக்கிறேன். கஷ்டப்பட்டுப் பள்ளியில் இடம் வாங்கித் தந்தபோது படிக்கப் பிடிக்கவில்லை என்று போகாமல் இருந்திருக்கிறேன். கைச் செலவுக்குத் தந்த காசு போதவில்லை என்று அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டில் திருடி இருக்கிறேன். மற்ற சிறுவர்களைப்போல சைக்கிள் வாங்கித் தர மாட்டேன் என்கிறாள் என்று கடுமையான வசைகளால் திட்டிஇருக்கிறேன். அம்மா எதற்கும் கோபித்துக்கொண்டதே இல்லை.அம்மா கஷ்டப்படுகிறாள் என்று தெரிந்தபோதும் யார் அவளை இப்படிக் கஷ்டப்படச் சொன்னது என்றுதான் அந்த நாளில் தோன்றியது. கல்லூரி வயதில் நண்பர்களோடு சேர்ந்து சுற்றவும், புதுப் புது ஆடைகள் வாங்கவும் குடிக்கவும் எத்தனையோ பொய்கள் சொல்லி இருக்கிறேன். என் அண்ணனும் தங்கையும்கூட இப்படித்தான் செய்திருக்கிறார்கள். ஆனால், அம்மா அதற்காக எவரையும் கோபித்துக்கொள்ளவே இல்லை.
கல்லூரி இறுதி ஆண்டில் மஞ்சள் காமாலை வந்து, நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் அம்மா. அப்போதுதான் அவர் எங்களை எவ்வளவு அக்கறையோடு, ஆதரவோடு காப்பாற்றி வந்திருக்கிறார் என்று புரிந்தது. அதன் பிறகு, என்னைத் திருத்திக்கொண்டு தீவிரமாகப் படிக்கத் துவங்கி, ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்து கடுமையாக உழைத்துப் பதவி உயர்வுபெற்றேன். அம்மாவை என்னுடனே வைத்துக்கொண்டேன். நான் சம்பாதிக்கத் துவங்கியபோதும், அம்மா ஒருபோதும் எதையும் என்னிடம் கேட்டதே இல்லை. நானாக அவருக்கு எதையாவது வாங்கித் தர வேண்டும் என்று நினைத்து, தங்க வளையல் வாங்கித் தருகிறேன் என்று அழைத்துப் போனேன்.
முதிய வயதில் அம்மா மிகுந்த கூச்சத்துடன், 'எனக்கு ஒரே ஒரு வாட்ச் வேண்டும். சின்ன வயதில் வாட்ச் கட்டிக்கொண்டு வேலைக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அது நடக்கவே இல்லை. அதன் பிறகு, எனக்குள் இருந்த கடிகாரம் ஓடு... ஓடு... என்று என்னை விரட்டத் துவங்கியது. அலாரம் இல்லாமலே எழுந்துகொள்ளப் பழகிவிட்டேன். இப்போது வயதாகிவிட்டது. சில நாட்கள் என்னை அறியாமல் ஆறு மணி வரை உறங்கிவிடுகிறேன். இரவு உணவை ஏழு மணிக்குச் சாப்பிட்டுவிடுகிறேன். ஒரு வாட்ச் வாங்கித் தருவாயா?' என்று கேட்டார்.
அம்மா விரும்பியபடி ஒரு வாட்ச் வாங்கித் தந்தேன். ஒரு பள்ளிச் சிறுமியைப்போல அதை ஆசையாக அம்மா எல்லோரிடமும் காட்டினாள். அதை அணிந்துகொள்வதில் அம்மா காட்டிய ஆர்வம் என்னை நெகிழ்வூட்டியது. அதன் பிறகு அம்மா, நான் திருமணம் செய்து டெல்லி, பெங்களூரு என்று வேலையாக அலைந்தபோது கூடவே இருந்தார். டெல்லியில் எதிர்பாராத நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நான் கூடவே இருந்தேன்.

'
நாங்கள் ஏமாற்றியபோது எல்லாம் ஏன் அம்மா எங்களை ஒரு வார்த்தைகூடத் திட்டவே இல்லை?' என்று கேட்டேன்.
அம்மா, 'அதற்காக நான் எவ்வளவு அழுதிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாது. ஆனால், அன்று நான் கோபப்பட்டு இருந்தால், என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போயிருப்பார்கள்' என்று சொல்லி, தன் கையை என்னுடன் சேர்த்துவைத்துக்கொண்டார்.
அப்போதுதான் அந்த முதிய கைகளைப் பார்த்தேன். அது எவ்வளவு உழைத்திருக்கிறது. எவ்வளவு தூய்மைப்படுத்தி இருக்கிறது. எவ்வளவு அன்பைப் பகிர்ந்து தந்திருக்கிறது. அதை ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பிறகு ஒருநாள், எனது கேமராவை எடுத்து வந்து, புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.
இன்று அம்மா என்னோடு இல்லை. ஆனால், இந்தக் கைகள் என்னை வழி நடத்துகின்றன. ஒவ்வொரு நாளும் நான் எப்படி வளர்க்கப்பட்டேன் என்பதை இந்தக் கைகள் நினைவுபடுத்துகின்றன. இதை வணங்குவதைத் தவிர, வேறு நான் என்ன செய்துவிட முடியும்?" என்றார்.
ராணுவ அதிகாரியினுடைய முகம் தெரியாத அந்தத் தாயின் கைகளை நானும் தொட்டு வணங்கினேன். அந்தக் கைகள் யாரோ ஒருவரின் தாயின் கைகள் மட்டும் இல்லை.
உலகெங்கும் உழைத்து ஓய்ந்துபோன தாயின் கைகள் யாவும் ஒன்றுபோலத்தான் இருக்கின்றன. அவை எதையும் யாசிக்கவில்லை. அணைத்துக்கொள்ளவும், ஆதரவு தரவும், அன்பு காட்டவுமே நீளுகின்றன. அதை நாம் புறந்தள்ளிப் போயிருக்கிறோம். அலட்சியமாகத் தவிர்த்து இருக்கிறோம்.
இலக்கு இல்லாத எனது பயணத்தில் யார் யார் வீடுகளிலோ தங்கியிருக்கிறேன். சாப்பிட்டு இருக்கி றேன். எனது உடைகளைத் துவைத்து வாங்கி அணிந்து இருக்கிறேன். அந்தக் கைகளுக்கு நான் என்ன நன்றி செய்து இருக்கிறேன். ஒரு நிமிடம் என் மனம் அத்தனை கைகளையும் வணங்கி, தீராத நன்றி சொன்னது.

'
கை விரல்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது இன்னொரு கைகள் நம்மோடு சேர்ந்துகொள்ளத்தான்' என்று எங்கோ படித்தேன். அதை நிறைய நேரங்களில் நாம் உணர்வதே இல்லை. நம் மீது அன்பு காட்டும் கைகளுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்முடிவு நம்மிடமே இருக்கிறது!

கோபத்தை குறைக்க சில வழிகள் :



 

 1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.


2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.


3. அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்


4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.


5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.


6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள்


7. நமது கெளரவம் பாதிக்கப்பட்டதை மறந்து மற்றவர்களை விட நமக்கு இறைவன் அளித்த வாய்ப்புகளை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.


8. எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.


9. சில நிமிடத்திற்கு உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நின்று கொள்ளுங்கள்.


10. கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.


11. முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.நீண்ட நாள் சந்தோசமாக வாழ வேண்டுமானால் நிச்சயம் நாம் கோபத்தை குறைத்தாக வேண்டும்.


நன்றி

சனி, 19 மார்ச், 2011

ஆட்டோ ஸ்டாண்ட்


 







புதுக்கோட்டை மாவட்டத்தின் சிறப்புகளில் மிக முக்கியமான ஓன்று புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இயங்கி கொண்டிருக்கும் ஆட்டோ ஸ்டாண்ட் என்றுதான் சொல்ல வேண்டும்.சுமார் 130 க்கும் மேற்பட்ட ஆட்டோ இயங்கி கொண்டிருக்கிறது.சுமார்  243 க்கும் 
மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளனர் என்பது இதன் சிறப்பாகும் .கடந்த வருடம் மார்ச் 27 ,2010 ,அன்று நாகநாதர் ஆலயத்தில் நாக  நாதருக்கு சிறப்பு அபிசேகமும் அதனை தொடர்ந்து அன்னதானமும் நடை பெற்றது.மேலும் மே தினத்தன்று அனைத்து ஆட்டோ
ஓட்டுநர்களுக்கும் இலவச சீருடை சவரி முத்து அருள் தாஸ்  நினைவு அறக்கட்டளை சார்பாக வழங்க பட்டது. மேலும் இன்னிசை கச்சேரியும் வெகு சிறப்பாக நடை பெற்றது.

புதன், 16 மார்ச், 2011

உதவி

A comment from duraipudukkotttai.blogspot.com(PUBLISHING FOR VIEWERS)

வாழ்வில் முழு வெற்றி பெற்ற மனிதன் முதல் முன்று படிகளை கடந்து தான் ஆக வேண்டும் .முதல் படி ஏளனம்    ,கேலி         இரண்டாவது படி கண்டனம்    ,ஆர்பாட்டம்     ,முன்றாவது படி மக்கள் தாங்களாகவே ஏற்றுக் கொள்ளுதல் .இது காந்தி சொன்ன செய்தி .இன்றல்லாம் சிறு உதவி செய்தால் கூட அதை பெரிய அளவில் விளம்பரம் செய்து கொள்வோரையே அதிக அளவில் காண முடிகிறது ,உதாரணமாக ஒரு கோவிலுக்கு ஒருவர் மின் விளக்கை கொடையாக அளிக்கிறார் என்றால் அவ்விளக்கு மறையும் அளவிற்கு அதில் தான் பெயரை எழுதி வைத்து விடுகிறார் .காரணம் தான் கொடை தந்தமை அடுத்தவருக்கு தெரிய வேண்ண்டும் என்ற எண்ணமே ஆகும் .இது போன்ற பண்புடைய மக்களுக்கு இடையே எந்த ஒரு புகழையும் எதிர் பார்க்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிற அய்யா டாக்டர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நிகர் அவர் தான் .

அமைச்சருடன் டாக்டர் ரவிச்சந்திரன்


duraipudukkottai.blogspot.com என்ற இனைய தளத்தில் வெளியான

செய்திகள் உங்கள் பார்வைக்காக
எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் ,ஆண்டவன் படைப்புகளில் அனைவரும் சமம் ,இங்கு ஏழை பணக்காரர் என்ற ஏற்ற தாழ்வு பார்க்கக்கூடாது ,மனிதன் தன்னை பல்வேறு விதமான ஆபத்து களில் இருந்து தன்னை காத்து கொள்கிறான் ,மனிதன் காட்டில் வசித்த காலத்தில் கொடிய விலங்குகளிடம் இருந்து தன்னை காத்து கொண்டான் ,அதன் பின் இயற்கையால் பல் வேறு விதமான ஆபத்துகளை சந்தித்தான் ,மனிதனின் நாகரிகம் வளர்ந்து நாடு ,வீடு  ,ஊர் ,என மாறியபின்னர் ,மனிதன் மதத்தால் இனத்தால் மொழியால் ஒருவரை ஒருவர் தாக்க தழை பட்டான் .நாகரிகம் வளர வளர மனிதனின் குணம் பண்பு ,செயல் ,ஆகியன மாறிக்கொண்டே உள்ளது .மனிதன் தவறான பாதையில் செல்லும் பொழுது  ஆண்டவன் சில நல்ல மனிதர்களை இப்புவுலகிற்கு அனுப்பி மக்களுக்கு சேவை செய்ய தூண்டுகிறான் .கடவுளால் பூமிக்கு அனுப்பப்பட்ட நல்ல உள்ளம் தான் அருமை சகோதரர் டாக்டர்  ரவிச்சந்திரன் அவர்கள் அவரை போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்களை காண்பது அரிது ,அவரது சேவைக்கு  இடு இணை ஏதுமில்லை .

மரம் வளர்ப்போம்

 duraipudukkottai.blogspot.com என்ற ப்ளாக் ல் வெளியான செய்திகள் உங்கள் பார்வைக்கு

 மரம் வளர்ப்போம் !மழை பெறுவோம் !என்ற வாசகத்தை அணைத்து வாகனத்தின்




பின்னால் பார்த்திருப்போம், ஆனால் எத்தனை நபர்கள் மரம் வளர்ப்பதில் ஆர்வம்
காட்டுகிறார்கள் என்று பார்த்தோமேயானால்,விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் தான்,இருப்பார்கள் .மரம் வளர்ப்போம் என்ற வாசகத்தை மட்டும் வாகனத்தின் பின்னாலும்,சுவற்றின் மேலும் எழுதி வைத்து விட்டால் மரம் வளர்ந்து விடுமா.
புதுக்கோட்டை மாவட்டத்தின் குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த அருமை சகோதரர் திரு.டாக்டர் ரவிசந்திரன் அவர்களுக்கு கட்டாயம் நாம் நன்றிசொல்லியே ஆகவேண்டும்
ஏன் என்றால்,2010 ஆம் ஆண்டை பொறுத்தவரை, மரம் வளர்ப்பதில் அதிக ஆர்வம்
காட்டியவர் என்ற பெருமை அவரையே சேரும் ,புதுக்கோட்டை மாவட்டத்தில்
39 வார்டுகள் உள்ளன.  அணைத்து பகுதி மக்களுக்கும் சுமார் 25 ஆயிரம்  இலவச மரக்கன்று கொடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தை பசுமையான மாவட்டமாக மாற்ற
முயலும்  கொடைவள்ளல் டாக்டர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி !


ம்

செவ்வாய், 15 மார்ச், 2011

வெற்றி படிகள்


நூற்றாண்டுகள், நூற்றாண்டுகளாக "மைதாசின் மாயக்கை" படைத்த, வெல்லவே முடியாத, எண்ணற்ற தடைகளைத் தகர்த்தெறிந்து இமயத்தை வென்ற எண்ணிலா மனிதர்கள் சுட்டி க்காட்டும் வரலாறை நாம் மறுக்க இயலுமா, மறைக்கத்தான் முடியும? ஒரு சிலருக்கு, அவர்களின் மகத்தான வெற்றி குருட்டு அதிர்ஷ்டத்தின் பயனாகத் தெரியலாம். மற்றும் சிலருக்கு அது அவர்களுடைய கடும் உழைப்பின் பரிசாகவும் தென்படலாம். ஆனாலோ, ஆண்ட்ரூ கார்னகி,, ஹென்ரி ஃபோர்டு ஆகியோரின் வியப்பூட்டும் வெற்றிகளின் பின்னே ஒளிந்துள்ள உண்மை மிகவும் சுவையானது என்பதை மறுக்கவே முடியாது!
ஒவ்வொரு மனிதனும் அடைய அவாவுறும்ஒரு உயர்ந்த நிலைதான் வெற்றி என்பது. கணக்கற்ற பலர்போல, சொந்த ஆசைகளைப் பூர்த்தி செய்யும் வழிகளை நீங்களே திறக்க முடியும். எப்படி என்று பார்க்கலாமா?

வெற்றிப்படி-1: அவா அல்லது ஆசை.
எந்த ஒரு இலக்கையும் அடையும் நடவடிக்கைகளின் முக்கிய அம்சம் என்னவென்றால், நாம் நமது இலக்கை அடைய எண்ணும் ஆசைக்கு நமது மனம் எவ்வாறு பதில் குரல் கொடுக்கிறது என்பதுதான். விறுப்பும், வெறுப்பும், வேண்டியும், வேண்டாமலும், தொட்டும், தொடாமலும் ஆன மனநிலையும் எண்ணமும் தோன்றினாலோ, வெளிப்பட்டாலோ, உள்ளத்தின் ஊக்கத்தின் அளவு குறைந்து, தோல்வியோ, அல்லது, பாதி வெற்றியோதான் எ ய்த முடியும்.
ஒரு இலக்கை அடையவேண்டும் என்றால், நமது திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி, வெற்றியெனும் இலக்கை எட்டும்வரை முழுமூச்சான எண்ணமும், உத்வேகமும், திட சித்தமும் கொள்ளவேண்டும். ஆசை அல்லது அவாதான் இந்தத்திட மனநிலையை உருவாக்கும்.
இந்த ஆசையெனும் விசைதான் மனிதகுலத்தை ஒவ்வொரு நிமிடமும் புதிய அறிவைப் பெறவேண்டுமென்ற ஆற்றொணாத் தாகத்திற்கு ஆளாக்கி, அறிவியலின் எல்லா எல்லைகளையும் தாண்டி, நம்பவே முடியாத, என்றுமே எதிர்பார்க்கவே முடியாத அளவு உயர்ந்த இலக்கை அடையவைத்துள்ளது என்றால் மிகையாகுமோ?


இந்த அவாவெனும் விசையை உருவாக்கி, வளர்ப்பது ஒன்றும் இமயமலையில் ஏறுவதுபோல் கடுமையானதும் அல்ல, இயலாததும் அல்ல. நாம் செய்யவேண்டியது எல்லாம், நமக்கு வேண்டியதை நோக்கி, நம் இலக்கை நோக்கிப் போய்க்கொண்டே இருப்பதுதான், இடைவிடாமலும், எந்த இடையூறுகளுக்கிடையிலம். எளிதாகச் சொன்னால், இவ்வளவுதான்! நிற்காதே! நிற்காதே! ஓடு! ஓடு! ஓடிக்கொண்டேயிரு, நிற்கவே நிற்காத குதிரையைப்போ ல்! குறைந்தபட்சம் நடந்துகொண்டேயாவது இரு. ஓய்ந்துபோய் உட்கார்ந்துவிடாதே! "நீ விட்டுவிட்டு நிற்கும்வரை, நீ தோல்வி அடைவதில்லை" என்ற மகத்தான பொன்மொழியை மறக்க முடியுமா! "நாம் எதையெல்லாம் மிக்க ஆர்வத்துடனும், இடைவிடாமலும் அடைய ஆசைப்படுகிறோமோ, அவையெல்லாவற்றையும் அடைவோம், எய்துவோம்", என்ற நெப்போலியனின் ொன்மொழியை மறக்கத்தான் முடியுமா!

வெற்றிப்படி - 2: இலக்கு
கடும் முயற்சிக்குப் பின்பும்கூட, பெரும்பாலோர் திருப்திகரமான முடிவுகளைப் பெற இயலாதுபோவதன் முதற்காரணம் என்னவென்றால், அவர்கள், தாங்கள் என்ன சாதிக்கப் போகிறோம் என்பதையே தெரிந்து கொள்வதில்லை. உங்களுடைய இலட்சியம் வெள்ளோட்டமாகவோ, அரைகுறையாகவோ இருக்கக் கூடாது. உங்களுடைய இலக்கை அடைவதற்கு முன்பு, அந்த இலக்கை அடைந்தபின் உங்கள் வாழ்க்கை எந்தவிதத்தில், எவ்வாறெல்லாம் மாறுபடும், வேறுபடும் என்பதை முன்கூட்டியே உணரவேண்டும், யோசிக்க வேண்டும். நீங்கள் என்ன சாதிக்கப் போகிறீர்கள் என்பதை நீங்கள் துல்லியமாகத் திட்டவட்டமாக, உள்ளங்கை நெல்லிக்கனிபோல, சந்தேகமே இல்லாமல் முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும். கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடைகள் கட்டாயம் வேண்டும்: இலக்கை அடைந்தபின் உங்கள் வாழ்க்கை எந்தமுறையில் இப்போது இருப்பதிலிருந்து வேறுபடும்? முன்னேறுமா, மாறுபடுமா? இலக்கை அடைந்தபின் நாம் எவ்வாறு உணர்வோம்? நமது நோக்கு எவ்வாறு மாறுபடும்? எந்தவிதமானச் சந்தர்ப்பங்களில், நிலைகளில் நாம் நிற்போம், ஆட்படுவோம்? நீங்கள் இலக்கை எட்டியபின், உங்களைச் சுற்றியுள்ள மக்கள் எவ்வாறு உங்களால் பாதிக்கப் படுவர்? அவர் எவ்வாறு எதிர்ச்செயல்படுவர்? நீங்கள் இலக்கை எய்துவது என்றால் என்ன, என்ற தெளிவான, முடிவான, சித்திரம் உங்கள் மனத்திரையில் விரிக்கப்பட வேண்டும்.

வெற்றிப்படி - 3: நம்பிக்கை
நம்பிக்கையினால்தான் ஆசை பிறக்கிறது. யாரேனும் மறுக்க முடியுமா?
ஆசையும், நம்பிக்கையும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்றால் மிகையாகாதன்றோ! இந்த நம்பிக்கைதான், ஊக்கம் எனும் நெருப்பை அணையாமல் எரியவிட்டுக் காத்து ஒளிர வைத்து நம்மை, நமது இலக்கை நெருங்கச் செய்கிறது. நம்பிக்கை என்பது மலைகளையெல்லாம் அசைக்கவும், இளக்கவும் உடைக்கவும் செய்யும். வெற்றியைக் கொன்று குவிக்கும் எதிரிகளான, தேவையில்லாத பயம், நம்மை நாமே குறைவாக மதிப்பிட்டுக் கொள்ளுதல், அநாவசியமான கவலை, துக்கம், சுயமரியாதைக் குறைவு ஆகிய வற்றையெல்லாம் உருக்கி, இளக்கி, அசைத்துக் கரைக்கவல்லது நம்பிக்கைதான்இலக்கை நமது மனதில் திடமாக அமைத்தபின்னர், இந்த அவா விசையானது கடக்கவே முடியாதவைபோல் தோற்றம் கொடுக்கும் தடைகளை நோக்கி நம்மை விசிறி எறியும். நாம் நமக்கு விருப்பமான வெற்றி முடிவை அடைவோம் என்ற அசைக்கவே முடியாத நம்பிக்கை நம்மை வெற்றியை நோக்கியே உந்தித் தள்ளும். இந்தத் திட நிலையைப் பிரதிபலிக்க மனத்தை இயக்கிவிட்டால், ஆச்சரியகரமான மாற்றங்களும், வெற்றியின் அடையாள ங்களும் தோன்ற ஆரம்பிக்கும். நம்பிக்கையின் அபரிமிதமான சக்தியையும், அதன் ஆச்சரியகரமான வெற்றிகளையும குறித்து பலரும் சான்றளித்தாலும், இன்னும் பலபேர்க்கு, பரிபூரணமான அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தபோதிலும், மலையளவு எதிர்ப்புகள் வருங்காலல் லாபகரமான முடிவுகள் வருமா, கிட்டுமா, என்ற சந்தேகம்தான்! வரும் தடைகள் உளவியலான தாகவோ, உடல்நிலையை ஒட்டியதாகவோ இருந்தாலும்,

"எதுவும் சரியான வழியில் செல்வதில்லை, எல்லாமே தவறாகிவிட்டன" என்ற ஒரே ஒரு தவறான எண்ணக்கீற்று மாத்திரம், இமயத்தையே வெல்லும் மனவுறுதி கொண்டவரையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிடும் ஒருநொடியிலேயே! ஆனால் இதே இந்தச் சந்தர்ப்பங்களிலும், நிலைகளிலும்தான் நம்பிக்கையும், விசுவாசமும் மகத்தான வெற்றி விளைவுகளைக் கொடுக்கும் என்பதை அனுபவித்துத்தான் உணரவேண்டும் என்பது உண்மை. உங்கள் மேல் நம்பிக்கை, உங்கள் செயலில் நம்பிக்கை, செயலை நிச்சயமாகச் செய்து முடிப்போம் என்ற விசுவாசமும், நம்பிக்கையுமே வாழ்வின் வெற்றுக்கு உறுதுணை!

ஒரு சிலர் உண்டு - "ஆமாம்! சொல்லுவது எளிது, செய்வது கடினம்" என்று தனக்குத்தானே குறைபடடுக் கொண்டு, உளவலிமையிலா திருப்பவர்கள். இந்த மனப்போக்குதான் எல்லாத் துன்பங்களையும் சிரஞ்சீவியாக வாழவைத்து உங்களையே அழிக்கும் முதல் எதிரியாகும். நம்பிக்கை வேண்டும் என்பதில் விசுவாசமாக இருங்கள். நீங்கள் தாங்களாகவே நம்பிக்கையைப் பெறுவீர்கள்.
ஒரு காகிதத்தில் உங்களது இலக்குகளையெல்லாம் அழகாக எழுதி வைத்துக்கொண்டு, ஒவ்வொரு காலையும் எழுந்தவுடனும், இரவு உறங்கப்போகு முன்னரும் "இதை நான் செய்து முடிக்க வேண்டும்" என்று திருப்பித் திருப்பிச் சொல்லிப் படியுங்கள். உங்கள் திறமையில் நம்பிக்கை வையுங்கள். "காலப் போக்கில், விரைவில் நாம் வெற்றி பெறுவோம்" என்று உங்களுக்கே, நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். அன்றாட மற்ற வேலைகளில் ஈடுபடும்போதுகூட, உங்கள் இலக்குகளை அடிக்கடி சொல்லிக் கொள்ளுங்கள், "வெற்றி பெறுவேன்" என்று நினையுங்கள். இப்படிச் சொல்வது உங்கள் மனதை நீங்களே எமாற்றுவதாக ஆரம்பத்தில் எண்ணலாம். அனால், போகப்போக ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவதைக் காண்பீர்கள்.

வெற்றிப்படி - 4:  திட்டம்.
நம்பிக்கை எனும் கரும்பாறையானக கட்டமைப்பின் மீது இலக்கை நிர்ணயித்துவிட்டீர்கள். ஒவ்வொரு செயலுக்கும், அதன் வெற்றிக்கும், இடம், பொருள், ஏவல் என்ற மூன்றும் இன்றியமையாதவை. செய்யும் இடம் முதல் தேவை. செய்வதற்குச் சிலரது உதவி தேவைப்பட்டால், அவர் யார் என்று தேர்ந்தெடுக்க வேண்டும். இலக்கு, எண்ணம், செயல் ஆகியவற்றின் துல்லியமான வரைபடம் வரையுங்கள். அதன்படி செயல்படுங்கள். வெற்றி நிச்சயம்!

ஆனால் ஒன்று! உங்களுடைய திட்டம் சரிவர வேலை செய்யுமா, உங்களுக்குப் பொருத்தமானதாக இருக்குமா, என்பதை ஆராயவேண்டும். வரைந்த திட்டம் கற்பாறையாக இல்லாமல், மாறுதல்களை ஏற்றுக் கொள்பவையாகவும் இருக்கவேண்டும். ஆனால் ஒரு எச்சரிக்கை! தீர ஆலோசித்துத் தீட்டிய திட்டத்தில், பின்னர் மாறுதல்களை உட்படுத்துவதற்கு முன்பு, அந்த மாறுதல்கள் தேவைதானா, காலப்போக்கில் நீடித்து நிற்குமா, என்று தீர யோசனை செய்தபின்தான் அந்த மாறுதல்களைத் திட்டத்தில் புகுத்தவேண்டும்.
எதோ ஒன்று செய்து, ஏதோ ஒரு இலக்கில் முடிவடைவதையும் சிலநேரம் தவிர்க்க முடியாது. எதிர்பார்த்த வெற்றி விரைவிலேயே கிடைத்துவிடலாம், தாமதமும் ஆகலாம். "சங்கிலித் தொடர் நிகழ்ச்சி" அல்லது "வண்ணத்துப் பூச்சி நிகழ்வு" என்பது இதற்குப் பெயர். இங்கும், அங்குமாக திட்டத்தில் நீங்கள் செய்த மாறுதல்கள், ஆச்சரியகரமான மேல்விளைவுகளையும் ஏற்படுத்தி, அதிசயப்படும் அளவு வெற்றியைக் கொடுப்பதும் உண்டு. தோல்வியையும் சிலநேரம் தழுவவேண்டியச் சங்கடமான நிலைமையும் சிலசமயம் ஏற்படலாம். எதற்கும் துணிந்து, தயாராக இருக்கவேண்டும்.

வெற்றிப்படி - 5: உருவகப்படுத்துதல்.
உள்ளத்தில் எழும் எண்ணங்களுக்கு உருவம் கொடுப்பது என்பதுதான் இது. "மனக்கோட்டை" என்றுகூடச் சொல்லலாம். நாம் இலக்கை அடைந்துவிட்டதாக எண்ணி மனதில் ஒரு திரைப்படத்தை உருவாக்குவது உள்ள எழுச்சிக்கு மிகவும் ஏதுவானது. இது ஒரு மிகச்சிறந்த பயனைக் கொடுக்கவல்லது. இது உங்களது அவாவிற்கும், விடாமுயற்சிக்கும் மணிமகுடம் சூட்டவல்லது, எனெனில், இதன்மூலம் நீங்கள் உங்கள் இலக்கை அடைந்துவிட்டதாகவே உள்ளம் எண்ணி , மகிழ்ந்து அமைதியுறுகிறது.

மனத்தளவில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றுவிட்டோம் என்னும் மகிழ்ச்சி, மேலும் என்னவெல்லாம் நன்மைகளைக் கொடுக்கிறது? முழு மன நிம்மதி, ஒரு நோக்கம் முடிவடைந்துவிட்டதென்று. அக்கம்பக்கத்தில் உள்ள மற்றவர்களும் நம்மைப் பாராட்டுவதை நாம் உளத்தளவில், மானசீகமாக உணர்கிறோம். இதுவே நமக்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுத்து, நம் அவா-விசையை உந்தித்தள்ளி, நம் நம்பிக்கையைப் பலப்படுத்தி நம்மை நம் இலக்கை நோக்கி முன்னேற வைக்கிறது. அதிசயம், ஆனால் உண்மை!

வெற்றிப்படி - 6: ஆழ்மன சக்தி
ஆழ்மனதின் அடிவாரத்திலிருந்துதான் தோல்வி அல்லது வெற்றிச் செடியின் விதை முளைக்கிறது. ஒவ்வொருவரின் சுயபிம்பம ஆழ்மனதிலிருந்துதான் வெளிப்படுகிறது. "இவன் இப்படிப் பட்டவன்தான், ஐயா, இவன் மாறவே மாட்டான்" என்கிறார்களே, அதுதான் இது. ஆனால் உண்மை என்னவென்றால், இந்த சுய பிம்பம் எளிதாக மாற்றப்படக் கூடியது. இந்தக் கட்டுரையைச் சரியாகவும், முறையாகவும் படித்துக் கூறப்பட்டக் கருத்துகளைச் செயல்படுத்தினால் எந்த ஒரு சுபாவத்தையும், உள்ள நிலையையும் எளிதில் மாற்றிவிடலாம். திறந்த மனப்பான்மையையும் உருவகப் படுத்தும் வழிமுறையையும் மேற்கொண்டு இந்தப் பயன்பெறலாம்.
ஆண்ட்ரூ கார்னகி தன் தொழிலைத் துவங்கும் காலத்தில் ஒரு குறிப்பிட்ட தொழிலிலோ, துறையிலோ ஆழ்ந்த திறமையில்லாதவராகவும், சாதாரணமான ஒரு மனிதராகவும்தான் இருந்தார் என்பது குறிப்பிடத் தகுந்தது.
தன் கடும் உழைப்பாலும், மேற்குறிப்பிட்ட வழிமுறைகளாலும், பலனடைந்து, பல மில்லியன்களை ஈட்டி எல்லோருக்கும் அவர் கொடுத்தார் என்பது இன்றைய அழிக்கவே முடியாத வரலாறு! கார்னகியின் தத்துவம் இன்றும் அமரத்துவம் வாய்ந்து சிரஞ்சீவியாக வாழ்வதை ஆயிரக்கணக்கில் கிடைக்கும் கார்னகியின் வெற்றிப் புத்தகக் குவியல்கள் நிலைநாட்டுகின்றன!
மேற்குறிப்பிட்ட ஆறு படிகளை வாழ்வில் நுட்பமாகப் பயன்படுத்தினால் இயலாத செயல் என்பது எதுவுமே இருக்காது!